ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றார் என்ற காரணத்துக்காக 45 வயது நகர் நடுரோட்டில் அடித்துக் கொல்லப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் உரையாற்றிய சில மணிநேரங்களில் இந்தப் படுகொலை நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் அலிமுதீன் என்கிற அஸ்கர் அன்சாரி தனது வேனில் இறைச்சி எடுத்துச் சென்றுள்ளார். பஜர்டண்ட் என்ற கிராமத்தில் வந்து கொண்டிருக்கும்போது 100க்கும் மேற்பட்டோர் அவர் வந்த காரை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் வந்த வேன், தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. நடுரோட்டில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் அலிமுதீன் அந்த இடத்திலேயே மயங்கிவிழுந்தார். காவல்துறையினர் அலிமுதீனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை ஏற்கமுடியாது என பிரதமர் உரையாற்றிய அதே நாளில் ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
உதயநிதி ஸ்டாலின் vs குஷ்பு ... சேப்பாக்கம் தொகுதியில் நேரடி பலப்பரீட்சை?
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?