கடந்த ஆண்டை விட 159% அதிகமாக இந்தியாவின் வங்கிகளில் மோசடி நடைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஆண்டு தோறும் வங்கி மோசடிகளும், கடன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தனியார் வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளிலேயே இந்த கடன் மோசடிகள் அதிகம் நடைபெறுகின்றன. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் நடைபெற்ற வங்கி மோசடிகளின் மதிப்பு ரூ.71,500 கோடியாக இருந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் இந்த மோசடித் தொகை 159% அதிகரித்து, ரூ.1,82,051 கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 8,700 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 4,413 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. அதன்மூலம் ரூ.1,48,400 கோடி மோசடியும் செய்யப்பட்டிருக்கிறது. தனியார் வங்கிகளை பொறுத்தவரை 3,066 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.34,211 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
இதுதவிர ஆன்லைன் மற்றும் கார்டுகள் மூலம் மட்டும் ரூ.195 கோடி மோசடி செய்யப்பட்டு, குற்றஞ்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வங்கிகள் தரப்பிலிருந்து ஆரம்பக்கட்ட எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்புவதில் தாமதம், தணிக்கையின்போது முறையற்ற அறிக்கைகளை தாக்கல் செய்தது, கூட்டு கடன்களில் நடைபெற்ற மோசடிகளை கண்டறிதல் ஆகியவற்றில் ஏற்றப்பட்ட குளறுபடிகள் மற்றும் தாமதமே இதற்கு காரணம் என ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!