மகாராஷ்டிராவில் நடந்த கட்டட விபத்தில், 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்திலுள்ள கஜல்புரா பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியானது தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கிறது.
கட்டடம் கட்டி 7 வருடங்களே ஆன நிலையில், கட்டடப்பணி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கித் தவித்த மெஹ்ருனிசா அப்துல் ஹமீத் காசி என்ற பெண் மணி கிட்டத்தட்ட 26 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு சிறு துளையில் சிக்கிக்கொண்ட அவரை மீட்பு பணி வீரர்கள் கடுமையாக போராடி மீட்டனர். இதே போல நேற்றும் 19 மணி போராட்டத்திற்கு பிறகு 4 வயது சிறுவனை மீட்பு படையினர் மீட்டனர். இடர்பாடுகளில் சிக்கியிருந்த அவர் மண் மற்றும் தூசியால் முழுவதுமாக மூடப்பட்டிருந்தார். அவருக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டு ஆம்புலன்ஸூக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி