காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்ற குழப்பங்கள் நீடித்த நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான தலைமை தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
சோனியாவிற்கு எதிராக கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதாவுடன் ரகசியக் கூட்டு வைத்துள்ளார்கள் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்றோர் ராகுலின் கருத்துக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டனர்.
இந்நிலையில் காலை 11 மணிக்கு தொடங்கி காரசார விவாதத்துடன் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்.
‘காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி நீடிக்க செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளோம். மேலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தவும் காரிய கமிட்டி குழுவில் ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம்’ எனவும் தெரிவித்தார்.
கூட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சசி தரூர், மணீஷ் திவாரி மற்றும் கபில் சிபில் ஆகியோர் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத்தை அவரது வீட்டில் சந்தித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்