மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் இருந்து 1 கோடியே 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் மே 13 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாயும் ஜீன் 16 ஆம் தேதி முதல் 200 ரூபாயாகவும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க 10 பறக்கும் படை அமைக்கப்பட்ட நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பின் மூலமாக மே 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரையிலான 100 நாட்களில் 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொரோனோ நோய்த்தொற்று குறைவதற்கு இது போன்ற நடவடிக்கை முக்கிய காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளார்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்