குர்கானில் பெய்துவரும் அடைமழை காரணமாக, குடியிருப்பு ஒன்று சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால் அதில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குர்கான் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
குர்கானில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட 46 பகுதிகளை அடையாளம் கண்டு மீட்பு நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மக்கள் வசித்துவந்த குடியிருப்பு ஒன்று சூழ்ந்திருந்த மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்து, ஒரு பக்கமாக லேசாக சாய்ந்தது. இதனால் அங்கு வசித்துவந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். குடியிருப்புக் கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் இருப்பதால் அதில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாறினர்
தற்போது அந்த குடியிருப்பு காலியான நிலையில் உள்ளது. அக்கட்டிடத்தை சுற்றியுள்ள மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டிடத்தின் அருகில் யாரும் நுழையாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு நிலைமை மேலும் மோசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
Loading More post
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு