செல்போன் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான சாம்சங் தனது உற்பத்தியை விரைவில் இந்தியாவில் துவங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
‘சர்வதேச அளவில் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பி.எல்.ஐ (உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டம்) மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
சாம்சங், பாக்ஸ்கான், விஸ்டரான், பெகட்ரான், லாவா, டிக்சான், மைக்ரோமேக்ஸ் என சுமார் 22 நிறுவனங்கள் செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான செல்போன் மற்றும் அதற்கான உதிரிபாகத்தினை உற்பத்தி செய்ய இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளன. இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கியுள்ளன. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் சுமார் பதினோரு ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யும்’ என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
அதை உறுதி செய்யும் வகையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங் இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வணிக செய்திகளை வெளியிடும் பத்திரிகை நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மலிவான சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதும், ஏற்றுமதி உட்பட இந்தியாவில் தொழில் தொடங்க ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதுமே சாம்சங் இந்தியாவில் தனது உற்பத்தியை துவங்க காரணமாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான இறுதிக்கட்ட பணிகளை சாம்சங் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வியட்நாம், பிரேசில் மற்றும் இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?