கேரள மாநிலம் பெட்டி முடி பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் தனது எஜமானின் 2 வயது குழந்தையை கண்டறிய நாய் ஒன்று உதவியுள்ளது.
கேரள மாநிலம் பெட்டி முடி மற்றும் ராஜா மாலா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த குடும்பங்கள் சிக்கின. இந்த நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன நபர்களை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானின் குழந்தையை மீட்க நாய் ஒன்று உதவியது அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மீட்பு பணியினர், நிலச்சரிவில் காணாமல் போன நபர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த குவி என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று ஆற்றின் அடியில் எதையோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. சந்தேகமடைந்த மீட்பு பணியினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றில் கிடந்த ஒரு மரத்தில் 2 வயது குழந்தை தனுஷ்கா சிக்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த மீட்பு படையினர் உடனடியாக தனுஷ்காவை ஆற்றிலிருந்து தூக்கினர்.
தனுஷ்காவின் குடும்பத்தில் அவரது 54 வயதான பாட்டி மட்டுமே உயிருடன் இருக்கிறார். தனுஷ்காவின் தந்தையான பிரதீப்பின் சடலம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டது. பிரதீப்பின் மனைவியான கஸ்தூரியும், அவரது சகோதரி ப்ரியதர்ஷினியையும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!