ரிசர்வ் வங்கி உத்தரவுபடி கடன்தாரர்களிடம் இருந்து கடனுக்கான தவணையை வசூலிக்க இடைக்கால தடை கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தவணை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ள காலத்தில் வசூலிக்கப்பட்ட கடன் தவணை தொகையை திரும்ப வழங்கவும், ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணையை வசூலித்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை.
ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணியின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா ஊரடங்கால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் இருப்பதால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்தும் காலத்தை மார்ச் முதல் மே வரை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கடனுக்கான தவணை செலுத்தும் காலத்தை கூடுதலாக 3 மாதங்கள் அதாவது, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் பெரும்பாலான வங்கிகள், நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை அமல்படுத்தவில்லை. ரிசர்வ் வங்கி உத்தரவுபடி கடனுக்கான தவணையை செலுத்த கால அவகாசம் கேட்டு கடன்தாரர்கள் அனுப்பும் கடிதங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்படுகின்றன. சில நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உத்தரவு எங்களுக்கு பொருந்தாது, எங்கள் நிர்வாகம் கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்கவில்லை என்கின்றனர்.
சில நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உத்தரவை அமல்படுத்த முடியாது என நேரடியாகவே சொல்கின்றன. பல நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கோரி அனுப்பும் விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் அப்படியே வைத்துள்ளன. வேறு சில நிதி நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கேட்டு விண்ணப்பிக்க தனிக்கட்டணம் வசூலிக்கின்றன.
கடன் தவணை செலுத்த தவறியதால் பல நிதி நிறுவனங்கள் கடன் பெற்று வாங்கிய இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன. வங்கி கணக்கில் இருப்பில் உள்ள பணத்தை சம்மதம் இல்லாமல் பிடித்தம் செய்கின்றன. கடனை திரும்ப செலுத்துமாறு கடன்தாரர்களை நிதி நிறுவனங்கள் நேரில் மிரட்டுகின்றன. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கடன்தாரர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர்.
அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட்டவை. ரிசர்வ் வங்கியின் உத்தரவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்காமல் அமல்படுத்த வேண்டும். தவறும் நிதி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். எனவே கடனுக்கான தவணை செலுத்த கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி 27.3.2020-ல் பிறப்பித்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி தவணை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ள காலத்தில் வசூலிக்கப்பட்ட கடன் தவணை தொகையை திரும்ப வழங்கவும், ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணையை வசூலித்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். அதுவரை ரிசர்வ் வங்கி உத்தரவுபடி கடன்தாரர்களிடம் இருந்து கடனுக்கான தவணையை வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி