மேற்குவங்க மாநிலம், ஜார்க்ராம் மாவட்டத்தில் கோபிபல்லாவ்பூரைச் சேர்ந்தவர் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சத்யம் பட்நாயக். கொரோனா அறிகுறி கொண்டவரை மருத்துவனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பதை அறிந்த அவர், உடனே பார்மஸிக்குச் சென்று பாதுகாப்புக் கவச உடையை வாங்கினார். அந்த உடையை அணிந்தபடி, இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நபரைச் சேர்த்தது மக்களால் பெருமையுடன் பேசப்படுகிறது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி பாராட்டுகளைக் குவித்துவருகிறது. இருசக்கர வாகனத்தில் பின்னே பயணம் செய்தவர் 43 வயதான அமல் பாரிக். புலம்பெயர் தொழிலாளரான அவர், சில நாட்களுக்கு முன்புதான் சிஜூவா கிராமத்திற்குத் திரும்பினார். அவருக்கு லேசான காய்ச்சல்.
கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்று பயந்தவருக்கு உடனே மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கவில்லை. இதையறிந்த உள்ளூர் திரிணமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யம் பட்நாயக், பாதிக்கப்பட்ட நபரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார். தற்போது கொரோனா பரிசோதனை முடிவுக்காக அந்த தொழிலாளர் காத்திருக்கிறார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?