சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் தோனி 2022ஆம் ஐபிஎல் வரை கண்டிப்பாக விளையாடுவார் என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காசி விஸ்வநாதன், “இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் தோனி தான் கேப்டன். அடுத்த ஆண்டும் (2021), அதற்கு அடுத்த ஆண்டும் (2022) அவரே கேப்டனாக தொடர்வார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
தற்போது தோனி ஜார்க்கண்டில் வலைப்பயிற்சி எடுப்பதாக ஊடகங்களின் வாயிலாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் அவரது ஆட்டத்திறன் குறித்து எந்த கவலையும் எங்களுக்கு இல்லை. அவருடைய பொறுப்பு என்ன என்பது அவருக்கு தெரியும். அவருக்கு தனது கிரிக்கெட் திறனையும், அணியையும் எப்படி வழிநடத்த வேண்டும் எனவும் தெரியும்” என்றார்.
ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் தோனி. இரண்டு ஆண்டுகள் தடைக்காலம் தவிர்த்து, மொத்தம் 10 ஐபிஎல் தொடர்களை தோனி தலைமையில் சென்னை அணி சந்தித்துள்ளது. இதில் 8 முறை இறுதிப் போட்டி வரை சென்னை அணி சென்றிருக்கிறது. அத்துடன் 3 முறை சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!