ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவர்கள், தங்கள் சட்டைப் பைகளில் கோழிக்குஞ்சை வைத்து, வெளியில் எடுக்கும் காட்சி உலகம் முழுவதும் இணைய வெளியில் வைரலாக பரவியுள்ளது. அந்த வீடியோவை கணித ஆசிரியர் ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆசிரியர் பெயர் குவாத்சியா குவான்பேரி.
செல்ல நாய்க் குட்டிகளுடன் குழந்தைகள் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்தச் சிறுவர்கள் கோழிக் குஞ்சுகளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சுற்றுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மூன்று பச்சிளம் சிறுவர்களின் அப்பாவித் தோற்றம் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
அந்தக் காட்சியில் அவர்களிடம், சட்டைப் பையில் என்ன இருக்கிறது என்று ஒருவர் கேட்கிறார். ஒவ்வொருவராக தயக்கத்துடன் தங்கள் பைகளில் இருந்து கோழிக்குஞ்சுகளை திருதிருவென விழித்தபடி எடுத்து வெளியே காட்டுகிறார்கள். பிறகு அவர்கள் மெல்ல அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். அந்தச் சிறுவர்களின் வெள்ளந்தியான நடவடிக்கைகள் உலகத்தையே கவர்ந்துவிட்டன.
கோழிக்குஞ்சுகளைத் திருடிய கோழிக்குஞ்சுகள் என்ற தலைப்பிடப்பட்ட அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.
جوجه مرغ دزدی توسط این جوجهها?? pic.twitter.com/p67XKDa2qF
— Qudsia Qanbary ➐ (@qudsia_qanbary) August 3, 2020Advertisement
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்