தங்கத்தை அதிகம் நுகர்வு செய்து வருகின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த சூழலில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை சமாளிக்க உலகளவில் உள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கமாக திரும்பியுள்ளது. அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ள காரணத்தினால் அதன் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.
வழக்கமாக ஆடி மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறாத காரணத்தினால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி இருக்கும் என அந்த துறையை சார்ந்தவர்கள் கூறுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக அதற்கு நேரெதிராக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போதையை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5374 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் 42992 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலையோடு ஒப்பிட்டு பார்க்கும்போது பவுனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் ஒரு கிராம் 5037 ரூபாய்க்கும், ஒரு பவுன் தங்கம் 40296 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்