ஜம்மு காஷ்மீரின் குல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக பஞ்சாயத்து தலைவர் பலியாகியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசு பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருபவர் சஜ்ஜத் அகமது காண்டே. இன்று காலை சஜ்ஜத் அகமது வீட்டை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அகமதை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 48 மணி நேரத்தில் தெற்கு காஷ்மீரில் பாஜக பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி குல்கம் மாவட்டத்தில் பாஜக பஞ்சாயத்து உறுப்பினர்கள் இருவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?