கர்நாடகாவைச் சேர்ந்த 110 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசுதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை வருத்தம் தரக்கூடியதாக இருந்தாலும், குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பது ஆறுதலான செய்தி. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த 110வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்
கொரோனாவை வென்ற 110 வயது மூதாட்டி கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தின் புருஜனாகட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்தம்மா. இவர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், சித்தம்மாவுக்கு வயது 110. அவருக்கு 5 பிள்ளைகள், 17 பேரப்பிள்ளைகள், 22 கொள்ளுபேரப்பிள்ளைகள் உள்ளனர். 110 வயதில் கொரோனாவை வென்று வீட்டிற்கு திரும்பியுள்ள சித்தம்மாவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்
Loading More post
"ஏன் அழுகுறீங்க" - இங்கிலாந்தை மறைமுகமாக கலாயத்த நாதன் லயான்!
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி