கோவையில் கொரோனாவால் வேலை இழந்து பெண் குழந்தையுடன் தவிக்கும் பெண் ஒருவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.
கோவை லாலி சாலை முனியப்பன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வத்சலா(49). திருமணமாகி 11 மாதத்திலேயே கணவரை இழந்த வத்சலா, கடந்த 12 ஆண்டுகளாக வீட்டு வேலைகள் செய்து தனி ஒருவராக தனது பெண் குழந்தையை வளர்த்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அவர் செய்து வந்த வீட்டு வேலையும் பறி போனதாகத் தெரிகிறது. இதனால் கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் என் பெண் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பாழாகிவிட்டது.போதிய வசதி இல்லாததால் தனியார் பள்ளியில் படித்து வந்த குழந்தையை தற்போது அரசு பள்ளியில் சேர்த்துள்ளேன். அதில் கூட எனக்கு வருத்தமில்லை. இந்த கொரோனா ஊரடங்கில் எனக்கு எங்கேயும் வேலைக் கிடைக்கவில்லை. வரும் மாதத்திலும் வேலைக்கிடைக்கவில்லை என்றால் அடிப்படைத் தேவைகளுக்கு நாங்கள் என்ன செய்வோம்” என்று கண்ணிரூடன் தனது இயலாமையை விளக்கினார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்