கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன.
திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடியில் 24 ஆயிரத்து 336 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது கோடை நெல் அறுவடைப் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மருதமாணிக்கம் பெரும்பண்ணையூர் வேலங்குடி திருக்கொட்டாரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் முற்றிலும் சார்ந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இந்த மழை தொடர்ந்து நீடித்தால் மிகப்பெரிய பாதிப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். மேலும் தற்போது மழை நீரை வடிய வைப்பதற்கான பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒருசில வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தினால் தண்ணீர் வடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் அழுகும் நிலை உருவாகும். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும் இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?