நடிகை வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி விடுவிக்கப்ப்டட சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தலைமறைவாகி உள்ளதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தொற்றுநோய் பரவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை வனிதா கொடுத்த புகாரின்பேரில், சூர்யா தேவி என்பவர் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அவரது இல்லத்திற்கு சுகாதாரத் துறையினர் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து சுகாதார ஆய்வாளர் ரமேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சூர்யா தேவி மீது பேரிடர் மேலாண்மை சட்டம், உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Loading More post
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?