ஊரெங்கும் கொரோனா பரவி வருவதனால் வணிக ஸ்தானபங்கள் அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது, முகக்கவசம் பயனப்டுத்துவது, வாடிக்கையாளர்களின் உடல் வெப்ப நிலையை பதிவு செய்து என கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இந்த பணிகளை அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செய்து வரும் நிலையில் தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொடுப்பதற்காக ரோபோ ஒன்றை பயன்படுத்தி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் ஒருவர்.
வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொடுப்பதோடு கடையில் உள்ள சேலைகளை காட்சிப்படுத்தும் அலங்கார பொம்மையாகவும் இந்த ரோபோ ‘டூ இன் ஓன்’ சேவை செய்து வருகிறது.
தற்போது இந்த சேலை கட்டிய ரோபோவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘கொரோனா காலத்தில் சரியாக இந்த ரோபோ தொழில்நுட்பத்தை அந்த கடையின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை