ஆந்திராவில் நிலத்தை உழவு செய்வதற்கு தன் சொந்த மகள்களைக் கட்டாயப்படுத்திய விவசாயி ஒருவரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலிவுட் நடிகர் சோனு சூட், “ஒரு டிராக்டரை அவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்” என ட்வீட் செய்திருந்தார். அதன்படியே புதிய டிராக்டர் ஒன்றையும் அனுப்பிவைத்து விவசாயி குடும்பத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.
சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த விவசாயிக்கு மாடுகளைக் கொண்டு உழுவதற்கு போதுமான பண வசதியில்லை. ஊரடங்கு காரணமாக வருமானமும் குறைந்துவிட்டது. கையில் அரைக்காசு இல்லாமல் தவித்த விவசாயி, தன் மகள்களைக் கட்டாயப்படுத்தி உழவைத்தார்.
அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்த நடிகர் சோனு சூட், “நாளை காலையில் அவர்களுக்கு உழவு மாடுகள் கிடைத்துவிடும். நாளை முதல் இரு மாடுகளும் நிலத்தை உழட்டும். மகள்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும். விவசாயிகள் நம் நாட்டின் பெருமை” என்று கூறியிருந்தார். மறுபடியும் வெளியிட்ட பதிவில், புதிய டிராக்டர் ஒன்றை வழங்கலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
நடிகர் சோனு சூட் செய்த உதவிக்கு விவசாயி குடும்பத்தினர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.
Loading More post
டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள்!
“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்