பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளம் காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பிரத்யயா அளித்தப்பேட்டியில் " பீகாரில் வெள்ளத்தினால் தர்பங்கா மாவட்டத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. கந்தக் நதி மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மக்களுக்கு உதவும் வகையில் 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இதேபோல அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்த தகவலின்படி அம்மாநிலத்தில் 17 மாவட்டங்களில் 6,80,931 பேர் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதித்துள்ளனர். 62 நிவாரண முகாம்களில் 4,852 பேர் தங்கியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல வெள்ள நிறுவனம் காரணமாக குறைந்தது 8,91,897 பல்வேறு செல்லப்பிராணிகளும் 8,01,233 கோழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!