உதகை ரயில் நிலையம் அருகேயுள்ள புச்சர் தெருவில் வீட்டிற்குள் புகுந்த நீர் ஆமையை வனத்துறையினர் லாவகமாக மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை, உடும்பு, நீர் ஆமை, பறைவைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் உதகை மலை ரயில் நிலையம் அருகேயுள்ள புச்சர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆமை ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஆமையை லாவகமாக மீட்டனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் “இந்த ஆமை அரிய வகை நீர் ஆமை. தற்போது மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பசுமை திரும்பியுள்ளது. மேலும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் நீர் ஆமை போன்ற உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வர துவங்கியுள்ளது. இந்த நீர் ஆமை மார்லி மந்து வனப்பகுதியில் விடப்படும்” எனத் தெரிவித்தனர்.
Loading More post
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!