இந்திய அணியின் கேப்டனாக தோனிக்கு மீண்டும் வாய்ப்பு: ரசிகர்கள் கோரிக்கை

இந்திய அணியின் கேப்டனாக தோனிக்கு மீண்டும் வாய்ப்பு: ரசிகர்கள் கோரிக்கை
இந்திய அணியின் கேப்டனாக தோனிக்கு மீண்டும் வாய்ப்பு: ரசிகர்கள் கோரிக்கை

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பினை மகேந்திர சிங் தோனி ஏற்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகினார். கும்ப்ளே பதவி விலகலைத் தொடர்ந்து கேப்டன் கோலிக்கு எதிராக முன்னாள் வீரர்கள் சிலரும், நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோலி-கும்ப்ளே மோதல் இப்போது புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. தோனி கேப்டனாக இருந்திருந்தால், கும்ப்ளே பதவி விலகியிருக்க மாட்டார் என்ற குரல் சமூக வலைதளங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், அனில் கும்ப்ளே பதவி விலகியது வருத்தமளிக்கிறது. இதனால்தான் தோனி சிறந்த கேப்டனாக எப்பொழுதுமே இருந்திருக்கிறார். வீராத் கோலியிடம் பொறுமையில்லை என்று பதிவிட்டுள்ளார். தோனியின் படத்துடன் பதிவிட்டுள்ள மற்றொரு வலைதளவாசி, தோனியை கேப்டனாக்கி கும்ப்ளேவின் பதவி விலகலை டிஆர்எஸ் முறை மூலமாக மறுபரீசிலனை செய்ய யாரேனும் முன்வருவீர்களா? என்று பதிவிட்டுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com