மின் கட்டண விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கையில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மின் கட்டணம் வழக்கமாக இருப்பதை விட அதிக மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், மின் கட்டண விவகாரத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிக மின் கட்டண விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கையில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு தொண்டர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும், தி.மு.க பொருளாலர் துரைமுருகன், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், அணைகட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் ஆகியோர் கறுப்புக் கொடி ஏந்தி காட்பாடியில் உள்ள தி.மு.க பொருளாளர் வீட்டின் மூன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி, அதிமுக அரசை கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு தலைமையில் திருச்சி திமுக அலுவலகத்தில் தனி மனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தொண்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
வதந்திகளுக்கு செவி சாய்க்கவேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்
நெல்லை: அணைகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு; தாமிரபரணியில் வெள்ளம் சற்று குறைந்தது!
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு