கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணுக்காக வேலை கேட்ட ஐபிஎஸ் : பாராட்டிய அதிகாரி

கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணுக்காக வேலை கேட்ட ஐபிஎஸ் : பாராட்டிய அதிகாரி
கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணுக்காக வேலை கேட்ட ஐபிஎஸ் : பாராட்டிய அதிகாரி

கொரோனாவிலிருந்து மீண்ட பெண்மணிக்காக நேரில் சென்று வேலைக்கு பரிந்துரை செய்த ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை துணை ஆணையர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ராதாம்மா என்ற பெண்மணி பணிபுரிந்ததாக தெரிகிறது. இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அதற்கான சிகிச்சைக்கு சென்றுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள இவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள குடியிருப்பு வாசிகள் அஞ்சுவதாக தெரிகிறது.

இந்நிலையில் ஏழை பெண்மணியான ராதாம்மாவிற்காக ஐபிஎஸ் அதிகாரி ஹரி கிரண் நேரில் சென்று குடியிருப்பு சங்க உறுப்பினர்களிடம் வேலைக்காக பரிந்துரை செய்துள்ளார். மேலும் கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் ராதாம்மா மீது புகார் அளிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த ஆக்கப்பூர்வமான செயலை அடையாறு துணை ஆணையர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com