திருவாரூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று வளையல் வியாபாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 7 வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் குழந்தையை காணவில்லை என பெற்றோர்களும் ஊர் மக்களும் தேடியுள்ளனர்.
இந்நிலையில், வடகண்டம் பகுதியைச் சேர்ந்த வளையல் வியாபாரியான கதிரேசன் (45) அந்த பகுதியில் வளையல் விற்பனை செய்வதற்காக வந்தது தெரியவந்தது. வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வீட்டின் அருகாமையில் தூக்கிச்சென்று அவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். இதனை சிறுமி தனது வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார்.
அதனையடுத்து பெற்றோர்களும் ஊர் மக்களும் வளையல் வியாபாரியை தேடிப்பிடித்து தாக்கி நன்னிலம் காவல்துறையில் ஒப்படைத்தனர். அதனையடுத்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கதிரேசனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது - கமல்ஹாசன்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
“உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!