புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிம்கார்டு மற்றும் போதை பொருள்கள் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறையில் உள்ள கைதிகள் சிலருக்கு தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை, அவர்களது ஆதரவாளர்கள் கொடுத்துச் சென்றுள்ளனர். இதனை சிறை காவலர்கள் சோதனை செய்த போது அந்த பொருள்களில் சிம்கார்டு மற்றும் புகையிலை, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இது குறித்து காலாப்பட்டு காவல்நிலையத்தில் சிறை நிர்வாகம் புகார் கொடுத்ததை அடுத்து காலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைதிகளுக்கு பொருள்களை கொடுத்த சுரேஷ், சீத்தாராமன், இளஞ்செழியன், கார்த்திகேயன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காலாப்பட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி