கொரோனா வைரஸை வதந்தி என நினைத்து அஜாக்கிரதையாக இருந்த அமெரிக்க இளைஞர் கொரோனாவால் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர், ‘கோவிட்-19’ என்ற பெயரில் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கொரோனா வைரஸ் எல்லாம் வதந்தி என்றுகூறி அந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதை நம்பி டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் பங்கேற்றார். அத்துடன் தான் ஒரு இளைஞர் என்பதால் தன்னை கொரோனா வைரஸ் பாதிக்காது என்றும், அவ்வாறு கொரோனா தொற்று வந்தாலும் குணமடைந்துவிடுவோம் எனவும் நினைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் பெரிதாக தென்படாமல் அவர் இருந்துள்ளார். ஆனால் பின்னர் அவரது ஆக்சிஸன் அளவு முற்றிலும் குறைந்துள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸால் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அவரைப் போன்று கொரோனாவை அலட்சியமாக நினைத்துக்கொண்டிருந்த அமெரிக்க இளைஞர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இளைஞர்களையும் கொரோனா வைரஸ் மரணமடையச் செய்வதாகவும், அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Loading More post
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி