கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவுவதாக உலக சுகாதார அமைப்புக்கு 32 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவரின் வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்கள் பயன்படுத்திய அல்லது அவர்கள் தொட்ட பொருட்களை மற்ற நபர்கள் தொட்டு, பின்னர் அவரவர் மூக்கு, கண் அல்லது வாயில் கை வைத்தால் கொரோனா பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதர அமைப்புக்கு எழுதிய கடிதத்தில், காற்றில் பரவும் மிக நுன்னிய கொரோனா வைரஸ் கூட மனிதர்களை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொரொனா பரவும் விதம் குறித்த அறிவுறுத்தலை உலக சுகாதார அமைப்பு மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் 32 நாடுகளின் விஞ்ஞானிகள் கூறும் கருத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்களின் அருகே நின்றாலோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சென்றலோ கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு ஏற்படலாம் என்பதுபோல் உள்ளது.
Loading More post
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
''அழியவில்லை; வாழ்கிறது'': அரிய பறவையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்!
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?