தடுப்பணை மற்றும் கால்வாய் உடைப்பை பார்வையிடச் சென்ற திமுக எம்எல்ஏவின் காலணிகளை திமுக உறுப்பினர் ஒருவர் கையில் எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் ஆம்பூரை அடுத்த பொண்ணபல்லி பகுதியில் ஏரி உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறியதால் ஏரிக்கரையை ஒட்டி உள்ள தடுப்பணை உடைந்து சேதமடைந்தது. இதை பார்வையிட ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.
அப்போது கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அதை கடக்க முயன்றபோது எம்எல்ஏ வில்வநாதன் தனது காலணியை கழற்றி விட்டுச் சென்றார். அவருக்கு பின்னால் வந்த திமுக வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் என்பவர் எம்எல்ஏவின் காலணிகளை கையிலெடுத்து கொண்டுச் சென்றார்.
எம்எல்ஏ கழட்டிவிட்ட காலணிகளை கையில் எடுத்துச்சென்ற கட்சி உறுப்பினரின் செயல் காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எம்எல்ஏ ஒருவரின் காலணியை கட்சி நிர்வாகி கையில் எடுத்துச்சென்ற இந்த விவகாரம் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்