சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மேய்ச்சலின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை கடித்ததில் பசுமாடு உயிரிழந்தது.
தமிழகம் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி, திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. மானாவாரி விவசாயியான இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கிராமத்தையொட்டியுள்ள வனத்தில் கால்நடைகளை மேய்த்து வந்த இவர். திகினாரை குட்டையில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது குட்டையில் காட்டுப்பன்றியை வேட்டையாட மறைத்து வைத்திருந்த அவுட் காய் எனப்படும் நாட்டுவெடியை கடித்ததில் மாடு படுகாயம் அடைந்தது.
இதில் அதன் வாய்ப்பகுதி சிதைந்து சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை உலுக்கியது. மேலும் திகினார் சிறுவர்கள் விளையாடும் இடம் என்பதால் அங்கு மறைத்து வைக்கப்படும் நாட்டு வெடியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டு வெடியை வைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!