ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி ஜூலை மாதத்தில் நிறைவடையும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடித்த பின்னர்தான் புதிய கடைகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், பல நேரங்களில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வருவதாகவும் இதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ 2011 மே மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் 2016 வரை தமிழகம் முழுவதும் பகுதி நேரம் கடைகள் உள்ளிட்ட 2226 புதிய கடைகள் திறந்துளளதாக கூறினார். புது கடைகள் திறப்பதற்கான விதிகள் முறையாக பூர்த்தியாகும் பட்சத்தில் தடையின்றி புதிய ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார். மேலும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் ஜூலை மாதத்திற்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் முடிவடையும் என்றார். நியாயவிலை கடைகளில் பொருட்கள் இல்லாத நிலை இல்லை எனவும் பொருட்கள் இருப்பு உள்ளதா என்பது குறித்து பொதுமக்கள் 102 என்ற எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம் என பதிலளித்தார்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!