மகாராஷ்டிராவில் ஒருவர் சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை விரட்டி அடிக்க முடியுமென்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் மகாராஷ்டிராவில் ஒருவர் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் தங்க நகைகள் மீது ஆர்வம் உடையவர்.
இவர் தற்போது தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார். சுமார் 2.89 லட்சம் மதிப்புடைய இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்னை இல்லை எனக் கூறுகிறார் ஷங்கர் குரேட். அதே நேரத்தில் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த தங்க மாஸ்க் உதவுமா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார். ஷங்கரின் தங்க மாஸ்க் குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள் தங்க மாஸ்கால் உங்களுக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர தொற்றில் இருந்தெல்லாம் காக்காது என தெரிவித்துள்ளனர்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி