பப்ஜி விளையாட்டில் 17 வயது சிறுவன் பெற்றோரின் சேமிப்பான ரூ.16 லட்சத்தை செலவழித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் பப்ஜி கேம்-ஐ விளையாடி வந்துள்ளார். அதற்கான தனது அம்மாவின் ஸ்மார்ட்போனை அவர் பயன்படுத்தியுள்ளார். சிறுவன் மொபையில் அதிகம் நேரம் செலவிடுவதைக் கண்டு பெற்றோர் கேட்கும் போது, ஆன்லைனில் படிப்பதாக அவர் பொய் கூறியுள்ளார்.
இந்நிலையில், பப்ஜி கேமில் அடுத்தடுத்த கட்டங்களை எட்டவும், புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளார். இவ்வாறாக, ரூ.16 லட்சத்தை அந்தச் சிறுவன் செலவழித்துள்ளார். வங்கியில் இருந்து வந்த மெசெஜ்களை பெற்றோருக்கு தெரியாமல் உடனே அந்த சிறுவன் அழித்துள்ளார்.
இந்த பணம் சிறுவனின் எதிர்காலம் மற்றும் மருத்துவ அவசரத்திற்காக பெற்றோர் சேமித்து வைத்திருந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை அறிந்த சிறுவனின் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார். அரசு அலுவலரான அவர் உடனே போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்தை மீட்க இயலாது என போலீசார் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, தந்தை கோபத்தில் சிறுவனை இருசக்கர வாகனங்கள் சீர் செய்யும் மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்