சிஎஸ்கே கேப்டன் தோனி ராஞ்சியில் நிச்சயம் ஏதோ செய்திருக்க வேண்டும் என அவரது பேட்டிங் திறனைக் கண்டு வியப்படைந்து சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா பேசியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்பு சர்வதேசப் போட்டிகளில் ஏதும் தோனி பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் தோனியை பார்ப்பதற்கு ஆவலாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தோனி குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய பேட்டிகளை சமூக வலைத்தளம் வாயிலாகவே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியில் புதிதாக வருகை தந்துள்ள சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லோ சென்னையில் தோனியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
அது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள பியூஷ் சாவ்லா "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டு, மீண்டும் களத்திற்கு வரும்போது விளையாட்டில் தடுமாற்றம் இருக்கும். ஆனால், தோனியிடம் அவ்வாறான தடுமாற்றத்தை நான் பார்க்கவில்லை. அவர் நிச்சயம் ராஞ்சியில் ஏதோ செய்திருக்க வேண்டும். பயிற்சி தொடங்கிய உடன் சில பந்துகளைச் சாதாரணமாக எதிர்கொண்டார். அதன்பின், அனைத்து பந்துகளையும் அடித்து ஆட ஆரம்பித்தார். எனக்கு ஒரே வியப்பாக இருந்தது" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "தோனி தினமும் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் ஒருநாளைக்கு இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் பயிற்சி மேற்கொண்டனர். ஆனால், இரண்டரை மணி நேரமும் இடைவேளை எடுக்காமல் ஒரு இளைஞர்போல் தோனி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்" என ஆச்சரியம் விலகாமல் பேசியுள்ளார் பியூஷ் சாவ்லா.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?