12-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் கோபிசெட்டி பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக கூறினார்.
இது குறித்து அவர் பேசியதாவது “ ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறிய நிலையில் அந்த முடிவில் தற்போது சிக்கல் நீடிக்கிறது. முதல்வரிடம் ஆலோசித் பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பற்றி கூற முடியும். பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்” எனக் கூறினார்.
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?