சிவகாசி அருகே, அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது. வீட்டிற்குள் இருந்த 3 பெண்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
சிவகாசி ரயில் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சுந்தர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுந்தர் தனது மனைவியுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுந்தரின் வீட்டிற்குள் புகுந்தது.
செங்கல்பட்டு: “மருத்துவர்கள் வந்து பார்ப்பதில்லை”- கொரோனா வார்டில் உள்ளவர்கள் புகார்
இதில் பலத்த சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து கணவன், மனைவி இரண்டு பேரையும் மீட்டனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டிற்குள் சிக்கியருந்த 3 பெண்களை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி பத்திரமாக மீட்டனர்.
காவல்துறையின் விசாரணையில் லாரியை ஓட்டி வந்த பாலகிருஷ்ணன், மது போதையில் லாரி ஒட்டி வந்தது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் லாரி ஒட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை