கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் ஊடகத் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் 957 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மக்கள் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், காவலர்கள் என பல்வேறு துறையினர் உயிரிழந்த நிலையில் ஊடகத் துறையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன் (40). கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வேல் முருகன் உயிரிழந்தார். கொரோனாவால் சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரில் வசித்து வந்த வேல்முருகன் பல்வேறு ஊடகங்களில் பல ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர், அவரது மனைவி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். வேல் முருகனுக்கு ஒரு மகன் உள்ளார்.
ஆதரவு இல்லாமல் வீதியில் தவித்த மூதாட்டி - மீட்டு முகாமில் சேர்ந்த இளைஞர்கள்
Loading More post
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!