காதல் கடிதம் எழுதி சிறுமியை மிரட்டிய 66 வயது முதியவர் கைது

காதல் கடிதம் எழுதி சிறுமியை மிரட்டிய 66 வயது முதியவர் கைது
காதல் கடிதம் எழுதி சிறுமியை மிரட்டிய 66 வயது முதியவர் கைது

கோவை போத்தனூர் அருகே சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை அடுத்த போத்தனூர் அருகே உள்ள பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா. இவருக்கு வயது 66. இவர் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாஷா சிறுமிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். அதில்  “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு ஒகே வா” என எழுதியிருந்தாகக் கூறப்படுகிறது.

 இதனைச் சிறுமி அவரது பெற்றோரிடம் கொண்டு கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாரிடம் இத்தகவலைத் தெரிவித்து அவரைக் கண்டித்துள்ளனர். ஆனால் பாஷாவோ அதைப் பற்றியெல்லாம் கவலைக்கொள்ளாமல் மீண்டும் சிறுமியை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயந்து போனச் சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமால் இருந்துள்ளார். இதனால் வேதனையடைந்த பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் முதியவரை கைது செய்து அவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com