வேலூர் மாவட்டம் மத்திய சிறையில் முருகன் 24-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் இலங்கையில் உள்ள தனது தாயுடன் வீடியோ காலில் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன் வீடியோ காலில் பேச அனுமதி கோரி கடந்த 1-ம் தேதி முதல், 24-வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.
உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் முருகனிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முருகனுக்கு இதுவரை 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்மிக ரீதியில் கடவுளை வேண்டிக்கொண்டு முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Loading More post
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!