திருமழிசை காய்கறிகள் சந்தையில் மழை நீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கோயம்பேட்டில் மூடப்பட்ட காய்கறிகள் சந்தை தற்காலிகமாக திருமழிசை துணை நகரத்தில் செயல்பட்டு வருகிறது. முறையான இடம், சாலை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தாலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து திருமழிசையில் காய்கறி சந்தையை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு பெய்த கன மழை காரணமாக காய்கறி சந்தை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. கடைகள் உள்ளே மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
இதனால் லாரிகளில் வந்த 5 ஆயிரம் டன் காய்கறிகளை எங்கு இறக்கி விற்பனை செய்வது என்பது தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே சேமிப்பு கிடங்கு இல்லாமல் காய்கறிகள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் வீணாக குப்பைக்கு செல்வதாகவும் தற்போது மழைக் காலம் என்பதால் காய்கறிகளை எப்படி விற்பனை செய்வது என்பது தெரியாமல் திணறி வருவதாகவும் வியாபாரிகள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் உடனடியாக மழை நீர் தேங்காமல் இருக்க கோயம்பேடு மார்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’