மும்பையில் கொரோனாவிற்கு மத்தியிலும் ரயில் ஓட்டிய பெண் ஊழியரை மத்திய ரயில்வேத்துறை பாராட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. குறிப்பாகத் தலைநகர் மும்பை கொரோனாவால் இயல்பு நிலையை இழந்ததுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு இடையே பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்காக நகர்ப்புற ரயில் இயக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று பெண் ஊழியர் மனிஷா மாஸ்கே கோர்பாட், நகர்ப்புற ரயிலை இயக்கினார். அவர் கண்ணாடியால் ஆன முகக்கவசத்தை அணிந்திருந்தார். அதற்குள் துணியால் ஆன முகக்கவசத்தை அணிந்திருந்தார். கொரோனா அச்சத்திற்கு இடையிலும் ரயிலை இயக்கியதற்காக மனிஷாவை பாராட்டியுள்ள மத்திய ரயில்வே, அவர் முறையாக முகக்கவசம் அணிந்திருப்பதை வெகுவாக பாராட்டியிருக்கிறது.
மேலும், ரயிலில் செல்லும் பயணிகள் அனைவரும் இதேபோன்று உரியப் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் எனவும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் மனிஷாவை பாராட்டி வருகின்றனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?