ராஜஸ்தானில் வானில் இருந்து மர்மப் பொருள் ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோர் பகுதியில் விண்கல் போன்ற ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளது. பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலியுடன் அந்த பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அந்த பொருள் விழுந்த இடத்தில் அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது என்றும், அதன் சத்தம் 2கிமீ சுற்றளவிற்கு கேட்டதாகவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பொருள் விழுந்தது முதல் வெப்பமாக இருந்ததாகவும், அதன் வெப்பம் தணிந்த பின்னரே போலீசார் அதனை மீட்டு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்தப்பொருள் சுமார் 2.78 கிலோ எடை கொண்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள நகைக்கடைக்கு சொந்தமான ஆய்வகத்தில் செய்யப்பட்ட முதற்கட்ட சோதனையில் அந்த கல்லில் ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல் மற்றும் இரும்பு அடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட சோதனைக்காக அந்த பொருளை ஜெய்பூரில் உள்ள புவியியல் தொடர்பான ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!