கிருஷ்ணகிரி அருகே விடைத்தாள் மாயமானதால் மீண்டும் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
10,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் மற்றும் வருகைப் பதிவை பொருத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே விடைத்தாள் மாயமானதால் மீண்டும் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மாணவியர்கள் சுமார் 15 ற்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு அருகே உள்ள டியூசன் சென்டரில் வைத்து 10 வகுப்பு தமிழ், மற்றும் அறிவியல் தேர்வை ஆசிரியர்கள் முன்னிலையில் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்துகிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் முருகன் கூறுகையில், போச்சம்பள்ளி அருகே மத்தூர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் 15 பேரும் அவர்களது பெற்றோருடன் ரேங்க் கார்டு கையெழுத்து இடவே, ஆசிரியரின் இல்லம் அருகே சென்றனர் எனவும் அவர்களுக்கு மறுத்தேர்வு வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
Loading More post
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் - மாநகர போக்குவரத்து கழகம்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்