காஞ்சிபுரத்தில் ஆற்று மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி கிராம நிர்வாக உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்டது அத்திவாக்கம். இக்கிராமத்தை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவர் சிறு வேடல் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பணி நிமிர்த்தம் காரணமாக மோகன்தாஸ் தனது கிராமத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூர் என்னும் இடத்தில் வந்தபோது எதிரே ஆற்று மணல் ஏற்றி வேகமாக வந்த டிப்பர் லாரி மோகன் தாஸ் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் கிராம நிர்வாக உதவியாளர் மோகன்தாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரியில் ஏற்றி வந்த ஆற்றுமணல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதா அல்லது மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
“ஆபாச வீடியோ எடுத்து மிரட்டினார்கள்” - தீக்குளித்ததால் உயிரிழந்த சிறுமி வாக்குமூலம்
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?