12 சென்ட் நிலத்திற்காக உறவினரை கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணண். இவரது மனைவி ஜமுனா (எ) சின்னம்மா.
கிருஷ்ணணின் மகனும் தற்போது இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக உள்ள கிருஷ்ணனும், இவரது அண்ணன் தாமோதரன் ஆகிய இருவரும் 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதில் 12 சென்ட் பொது இடத்திற்கு இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே 12 சென்ட் பொது இடத்தில் கிருஷ்ணண் தண்ணீர் தொட்டி கட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று மாலை கிருஷ்ணணுக்கும் அண்ணண் தாமோதரன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் தாமோதரனின் மகன்கள் முருகன், காந்தி, பாஸ்கர் ஆகியோர் கிருஷ்ணண் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் இரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பனமடங்கி காவல் துறையினர் இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிருஷ்ணண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மனைவி ஜமுனா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பனமடங்கி காவல் துறையினர் தாமோதரன் மற்றும் அவரது மகன்கள் முருகன், காந்தி, பாஸ்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’