கொடைக்கானல் ஏரியில் ஆகாயத்தாமரை அடர்ந்து படர்ந்து வருகிறது. ஏரி முழுவதும் ஆக்கிரமிக்கும் முன்னர் அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் கடந்த 80 நாட்களாக படகு சவாரி இல்லாமல் உள்ளது. படகு போக்குவரத்து இல்லாததால், ஏரிக்கரையோரங்களில் ஆகாயத் தாமரைகள் அடர்ந்து படர்ந்து அதிகமாக வளர்ந்து வருகின்றன. படகு போக்குவரத்து நடைபெறும் நாட்களில், படகு குழாம் பணியாளர்கள் மற்றும் நகராட்சியினர் இணைந்து, படரும் தாமரைகளை அவ்வப்பொழுது அகற்றி வந்ததாகவும், தற்பொழுது அப்பணிகள் நடைபெறவில்லை என ஏரிச்சாலை வணிகர் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
டிக்டாக் மூலம் இளைஞரிடம் பணம் பறித்த இளம்பெண்: 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸ்
வேகமாக படரும் ஆகாயத் தாமரைகள் ஏரி முழுவதும் ஆக்கிரமிக்கும் முன்னர், நகராட்சி நிர்வாகத்தினர் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆகாயத்தாமரைகளை அகற்ற நகராட்சியினருடன் இணைந்து ஏரிச்சாலை வணிகர் கூட்டமைப்பினர் உதவ முன்வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் நாராயணனிடம் கேட்டதற்கு, ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Loading More post
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
''அழியவில்லை; வாழ்கிறது'': அரிய பறவையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்!
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?