(கோப்பு புகைப்படம்)
மும்பையில் இருந்து கோவாவுக்கு வந்த மூதாட்டி முறையான கொரோனா பரிசோதனைகளில் இருந்து தப்பியது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கோவாவில் மொத்தம் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 57 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பி விட்டனர். தற்போது 109 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில்தான் மும்பையில் இருந்து கோவாவுக்கு வந்த மூதாட்டி ஒருவர் கொரோனா பரிசோதனைகளில் இருந்து தப்பி சென்றிருக்கிறார்.
இதையடுத்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், “அவர் சோதனை தவிர்த்து மாநிலத்திற்குள் நுழைந்தார் என்பது உண்மைதான். கொரோனா உறுதியான பின்னர் அவர் பிரத்யேக கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 3,000 பேர் மாநிலத்திற்குள் நுழைகிறார்கள், எனவே அவர் எவ்வாறு சோதனையைத் தவிர்த்தார் என்பதை அறிவது கடினம்” எனத் தெரிவித்தார்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!