ரிசர்வ் வங்கி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 1.5% வீழ்ச்சியடையும் என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அமெரிக்கா, சீனா என வளர்ந்த நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் சறுக்கியுள்ளன. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளும் பொருளாதாரத்தில் பாதிப்பை கண்டுள்ளன. இதனை மீட்பதற்கு மத்திய அரசு சார்பில் பல நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை பெருக்க தீவிரம் காட்டப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பொருளாதார நிலையை கணக்கீடு செய்ய 5,076 குழுக்கள் கொண்ட அமைப்புடன் சேர்ந்து ரிசர்வ் வங்கி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் நுகர்வோரின் நம்பகத்தன்மை மற்றும் வாங்கும் திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையுமென கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி 1.5% வரை சரிவடையும் என்றும், ஆனால் அடுத்த நிதியாண்டில் ஜிடிபி 7.2% வரை வளர்ச்சியடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தனியாரின் இறுதி நுகர்வுச் செலவு 0.5% சரியும் என்றும், அடுத்த நிதியாண்டில் இது 6.9% வரை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூலதனப் பொருட்களின் மொத்த உற்பத்தியும் 6.4% சரிவடைந்து, பின்னர் 5.6% அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!