கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரான டி.கே.சிவகுமாரின் மகளுக்கும் மறைந்த காஃபி டே நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தாவின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் காஃபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். கடந்தாண்டு சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றங்கரையோரம் மாயமானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 36 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் உடற்கூராய்வு செய்யப்பட்ட அவரது உடல் அவரது காஃபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கூறியது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவரான டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மறைந்த சித்தார்த்தாவின் மகன் அமர்த்யாவுக்கும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடைபெற இருப்பதாக "தி நியூஸ் மினிட்" செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த இருவருக்கும் ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவருக்குமான திருமண முடிவு சித்தார்த்தா உயிருடன் இருக்கும்போதே பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
டி.கே.சிவகுமாரின் மகளான 22 வயதான ஐஸ்வர்யா பொறியியல் பட்டதாரி. இவர் தந்தையின் நிறுவனமாக "குளோபல் அகாதெமி டெக்னாலஜி"யை கவனித்து வருகிறார். சித்தார்த்தாவின் மகனான 27 வயதான அமர்த்யா தன் தாயுடன் இணைந்து காஃபி டே மற்றும் குடும்பத்தின் குழும நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி